sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வைகுண்டபெருமாள் கோவில் சீரமைப்பு பணி தீவிரம்

/

வைகுண்டபெருமாள் கோவில் சீரமைப்பு பணி தீவிரம்

வைகுண்டபெருமாள் கோவில் சீரமைப்பு பணி தீவிரம்

வைகுண்டபெருமாள் கோவில் சீரமைப்பு பணி தீவிரம்


ADDED : பிப் 08, 2025 12:31 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2007 ம் ஆண்டு நடந்தது.

இந்நிலையில் கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது.

திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, கடந்த ஆண்டு அக்., மாதம் 21ம் தேதி கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து தொல்லியல் துறையின், ரசாயண பொறியாளர் பிரிவு வாயிலாக கோவில் கோபுரங்களில் படிந்திருந்த பாசி மற்றும் துாசுகளை அகற்றி, பழமை மாறால் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தொல்லியல் துறையின் ரசாயண பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் கோவில் சீரமைப்பு பணி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் ரசாயண தன்மை இல்லாத நுரைப்பு எண்ணெயை கலந்து, அதை நுரைக்க வைத்து, இலகுவான பிரஷ் வாயிலாக துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிந்ததும், கோபுரத்தின் மீது மழைநீர் படியாத வகையில் மெழுகு போன்ற படிமம் பூச்சு பூசப்படும். தற்போது 50 சதவீத பணி முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us