sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிதிலமடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

/

சிதிலமடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

சிதிலமடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

சிதிலமடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்


ADDED : அக் 04, 2024 12:44 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையில், 2004ல் கட்டப்பட்ட நத்தப்பேட்டை பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு, திருக்காலிமேடு, நத்தப்பேட்டை, பெரியார் நகர், காசீம் நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள், ஜாதி, இருப்பிடம், பட்டா மாற்றுதல், உட்பிரிவு, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சான்று வாங்க தினமும் 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வி.ஏ.ஏ., அலுவலகம் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆனதால், கூரையில் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.

அலுவலக கட்டடத்திற்கும், படிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், உட்புறத்தில் மழைநீர் கசிவதால், அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சேதமாகும் நிலை உள்ளது. இதனால், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சான்று பெற வருபவர்கள் அச்சத்தில் வந்து செல்கின்றனர்.

எனவே, சிதிலமடைந்த நிலையில் திருக்காலிமேடில் இயங்கும், நத்தப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us