தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வி.ஏ.ஒ., கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை

வி.ஏ.ஒ., கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை

வி.ஏ.ஒ., கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை


ADDED : அக் 13, 2024 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டை கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழைய கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது. இக்கட்டடத்தின் கூரை சிதிலமடைந்து மழைக்காலத்தில் நீர் சொட்டுவதால், அச்சமயம் அலுவலகம் சம்பந்தமான ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஆபத்தான நிலையிலான அக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, சில மாதங்களுக்கு முன், பழுதடைந்த அக்கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது களியப்பேட்டை ஊராட்சிக்கு சொந்தமான இ.- சேவை மைய கட்டடத்தில் வி.ஏ.ஒ., அலுவலகம் இயங்குகிறது.

ஊராட்சிக்கான கட்டடத்தில் வி.ஏ.ஒ.,அலுவலகம் இயங்குவதால் நெருக்கடி உள்ளது. எனவே, வி.ஏ.ஒ.,அலுவலகத்திற்கென களியப்பேட்டையில் புதியதாக கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us