/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வி.ஏ.ஓ., கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை
/
வி.ஏ.ஓ., கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை
ADDED : அக் 14, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:களியப்பேட்டையில் பழைய கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது.
இக்கட்டடத்தின் கூரை சிதிலமடைந்து மழைக்காலத்தில் நீர் சொட்டுவதால், ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, சில மாதங்களுக்கு முன், பழுதடைந்த அக்கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது களியப்பேட்டை ஊராட்சிக்கு சொந்தமான இ - சேவை மைய கட்டடத்தில் வி.ஏ.ஒ., அலுவலகம் இயங்குகிறது.
ஊராட்சிக்கான கட்டடத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் இயங்குவதால் நெருக்கடி உள்ளது. எனவே, வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கென களியப்பேட்டையில் புதிதாக கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.