sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அனுஷ்டான குள உற்சவம் விமரிசை வேடுவ அலங்காரத்தில் வரதராஜர்

/

அனுஷ்டான குள உற்சவம் விமரிசை வேடுவ அலங்காரத்தில் வரதராஜர்

அனுஷ்டான குள உற்சவம் விமரிசை வேடுவ அலங்காரத்தில் வரதராஜர்

அனுஷ்டான குள உற்சவம் விமரிசை வேடுவ அலங்காரத்தில் வரதராஜர்


ADDED : ஜன 22, 2025 01:01 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 12வது நாள், காஞ்சிபுரம் செவிலிமேடில் ராமானுஜருக்கு உள்ள தனி சன்னிதியில், அனுஷ்டான குள உற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான அனுஷ்டானகுள உற்சவம் விமரிசையாக நடந்தது.

இதில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ராமானுஜருடன் செவிலிமேடு சாலை கிணறு அனுஷ்டான குளம் அருகில் உள்ள ராமானுஜர் சன்னிதியில், பகல் 12:30 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, சாலை கிணறு தீர்த்தத்தில் திருமஞ்சனம் நடந்தது.

பின், மாலை 4:20 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் வேடுவர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹாதீபாராதனை முடிந்ததும், வரதராஜ பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு, துாப்புல் வேதாந்த தேசிகன் கோவிலுக்கு சென்றார்.

அங்கு, பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து புறப்பாடாகி, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றார். உற்சவத்திற்கான ஏற்பாட்டை வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சாலை கிணறு ராமானுஜர் சன்னிதி பக்தர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us