/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாளை வெள்ளேரி அம்மனுக்கு வருஷாபிஷேகம்
/
நாளை வெள்ளேரி அம்மனுக்கு வருஷாபிஷேகம்
ADDED : டிச 07, 2024 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், வெள்ளேரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது.
ஆண்டுதோறும், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நாளில், வருஷாபிஷேகம் நடத்துவது வழக்கம். நடப்பாண்டின், எட்டாவது வருஷாபிஷேக விழா, நாளை காலை 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து, பகல் 11:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.