/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்
ADDED : மே 24, 2025 11:00 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் துவங்கியது.
முதல் நாளான நேற்று காலை கண்ணாடி அறையில் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் எழுந்தருளினார்.
அங்கிருந்து புறப்பட்டு கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என, அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து ஆறு நாட்களும் இதேபோன்று நடைபெறும் உத்சவத்தில், வரதராஜ பெருமாள் பல்வேறு மலர் அலங்காரத்தில் எழுந்தருள்வார்.
வசந்த உத்சவம் நிறைவு நாளான வரும் 30ம் தேதி காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் புறப்பாடாகி வசந்த மண்டபம் வந்தடைவார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தளி மாட வீதி புறப்பாடு நடைபெறும். நிறைவாக அனந்தசரஸ் திருக்குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடைபெறும்.