sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்


ADDED : மே 24, 2025 11:00 PM

Google News

ADDED : மே 24, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் துவங்கியது.

முதல் நாளான நேற்று காலை கண்ணாடி அறையில் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் எழுந்தருளினார்.

அங்கிருந்து புறப்பட்டு கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என, அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து ஆறு நாட்களும் இதேபோன்று நடைபெறும் உத்சவத்தில், வரதராஜ பெருமாள் பல்வேறு மலர் அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

வசந்த உத்சவம் நிறைவு நாளான வரும் 30ம் தேதி காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் புறப்பாடாகி வசந்த மண்டபம் வந்தடைவார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தளி மாட வீதி புறப்பாடு நடைபெறும். நிறைவாக அனந்தசரஸ் திருக்குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us