sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வசந்த உத்சவம் நாளை நிறைவு வரதர் குதிரை வாகனத்தில் உலா

/

வசந்த உத்சவம் நாளை நிறைவு வரதர் குதிரை வாகனத்தில் உலா

வசந்த உத்சவம் நாளை நிறைவு வரதர் குதிரை வாகனத்தில் உலா

வசந்த உத்சவம் நாளை நிறைவு வரதர் குதிரை வாகனத்தில் உலா


ADDED : மே 29, 2025 12:15 AM

Google News

ADDED : மே 29, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம், கடந்த 24ம் தேதி துவங்கியது.

உத்சவத்தையொட்டி, தினமும் காலையில் கண்ணாடி அறையில் எழுந்தருளும் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்து வருகிறது.

மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் வெவ்வேறு மலர் அலங்காரத்தில், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் எழுந்தருள்கிறார்.

அங்கிருந்து புறப்பாடாகி, கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என, அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார்.

அங்கு திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்து வருகிறது. இதில், ஆறு நாட்களும் தினமும் பல்வேறு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

வசந்த உத்சவம் நிறைவு நாளான நாளை, காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து வரதராஜ பெருமாள் புறப்பாடாகி, வசந்த மண்டபம் வந்தடைகிறார்.

அங்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், மாட வீதிகளில் உலா வருகிறார்.

நிறைவாக, அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us