ADDED : செப் 29, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் துாப்புல் வேதாந்த தேசிகர் தங்க பல்லக்கில், வேணுகோபாலன் திருக்கோலத்தில் நேற்று வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் துாப்புல் வேதாந்த தேசிகர் கோவி லில் 757வது புரட்டாசி திரு வோண நக் ஷத்திர வார்ஷீக மஹோத்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது.
ஆறாவது உத்சவமான நேற்று காலை தங்க பல்லக்கில், வேணுகோபாலன் திருக்கோலத்திலும், இரவு யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இதில், ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ராமர் திருக்கோலத்தில் வேதாந்த தேசிகர் அருள்பாலிக்கிறார்.