sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

/

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்


ADDED : அக் 30, 2024 09:07 PM

Google News

ADDED : அக் 30, 2024 09:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் - பொன்னேரிக்கரை, பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்பு கடவுப்பாதைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

விபத்து தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளன.

மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் 2022ம் ஆண்டு பணி துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும். அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 டிச., முடிக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, காரப்பேட்டை- - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 அக்டோபர் மாதம் முடிக்க வேண்டும்.

கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் கால அவகாசம் நெருங்கியும் முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் கூட்டு சாலையில், மேம்பாலம் கட்டுமான பணிகளை அறவே துவக்கவில்லை.

இதுதுவிர, சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலம் கட்டுவதற்கு மாற்றுபாதை அமைத்து விட்டு, மேம்பாலங்கள் கட்டி உள்ளனர்.

வாகனங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ப, சாய்தள வசதி ஏற்படுத்தவில்லை. இருப்பினும், மண்கொட்டி மேம்பாலம் அமைக்கலாம் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியதின் பேரில், கடந்த ஜூன் மாதம் மேம்பாலம் சாய்தளப் பகுதியில் மண்கொட்டி நிரப்பும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளின் போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, ஆரியபெரும்பாக்கம், தாமல், திருப்புட்குழி கடவுப்பாதைகளில் நீண்ட நேரம் வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

எனவே, பிரதான கடவுப்பாதைகளில், நெரிசலில் சிக்கும் வாகனங்களை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us