sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விஜயேந்திரர் சுவாமிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை

/

விஜயேந்திரர் சுவாமிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை

விஜயேந்திரர் சுவாமிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை

விஜயேந்திரர் சுவாமிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை


ADDED : டிச 20, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சங்கர மடத்தில், கடந்த 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி தலைமையில், 44வது கிருஷ்ண விஜய துர்கா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுரவுதசுமார்த் வித்வத் மஹா சபையின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்த காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரத்திற்கு வந்தார். அவருக்கு, காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளக்கரை அருகே, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் தலைமையில், கோவில் ஸ்தானீகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி வந்தார். அங்கு, மடத்தின் ஸ்ரீகாரியம் விஸ்வநாத சாஸ்திரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டன. பர்வதமலை சிவன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், சங்கரா கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் மடத்தின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us