sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருப்பதி சங்கரமடத்தில் விஜயேந்திரர் முகாம்

/

திருப்பதி சங்கரமடத்தில் விஜயேந்திரர் முகாம்

திருப்பதி சங்கரமடத்தில் விஜயேந்திரர் முகாம்

திருப்பதி சங்கரமடத்தில் விஜயேந்திரர் முகாம்


ADDED : நவ 27, 2024 09:00 PM

Google News

ADDED : நவ 27, 2024 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கர்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்ட காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அம்மாநிலத்தில் யாத்திரையை நிறைவு செய்து, இன்று முதல், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில் முகாமிட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது:

ஆந்திர மாநிலம், திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களின் அழைப்பை நவ., 16ம் தேதியில் இருந்து, கர்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டார்.

இதில், தர்மஸ்தாலா, உடுப்பி, ராமச்சந்திரா மடம், ஹாசன் முதலிய இடங்களுக்கு விஜயம் செய்தார். யாத்திரை மேற்கொண்ட இடங்களில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, பல்வேறு அமைப்புகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு அருளுரையாற்றி, ஆசி வழங்கினார்.

கர்நாடக மாநிலத்தில், விஜய யாத்திரையை நிறைவு செய்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று திருப்பதிக்கு வந்தார்.

திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வழக்கம் போல சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வதுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us