sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பொற்பந்தல் குளம் சீரமைக்க கிராமவாசிகள் வலியுறுத்தல்

/

பொற்பந்தல் குளம் சீரமைக்க கிராமவாசிகள் வலியுறுத்தல்

பொற்பந்தல் குளம் சீரமைக்க கிராமவாசிகள் வலியுறுத்தல்

பொற்பந்தல் குளம் சீரமைக்க கிராமவாசிகள் வலியுறுத்தல்


ADDED : மே 02, 2025 12:53 AM

Google News

ADDED : மே 02, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில், பொது குளம் உள்ளது. இந்த குளம் கிராமத்தின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இக்குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், பாசி படர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், மழை நேரங்களில் குளத்தில் போதிய அளவு தண்ணீர் சேகரமாக முடியாத நிலை உள்ளது.

தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லப்படும் கால்நடைகள், இந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்கவருகின்றன.

அப்போது, குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளதால், கால்நடைகள் குளத்தில் இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, பொற்பந்தல்பொது குளத்தை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us