/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான குழாயில் உடைப்பு ஒரு மாதமாக குடிநீர் வீண்
/
பிரதான குழாயில் உடைப்பு ஒரு மாதமாக குடிநீர் வீண்
ADDED : ஜன 04, 2025 12:56 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நுழைவாயில் அருகே, பிரதான சாலையில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது.
இதனால், இப்பகுதியில் வசிப்போருக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதோடு, தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையும் சேதமடைந்து வருகிறது.
எனவே, ஏரிவாய் கிராமத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க, முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.