/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் குடிநீர் வீணடிப்பு
/
பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் குடிநீர் வீணடிப்பு
பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் குடிநீர் வீணடிப்பு
பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் குடிநீர் வீணடிப்பு
ADDED : ஜன 22, 2025 12:53 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுளில், 884 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓரிக்கை பாலாற்றாங்கரையில் இருந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் செல்கிறது.
இதில், ஓரிக்கை முல்லை நகர், தாமரை தெரு சந்திப்பில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது.
இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையும் சேதமடையும் சூழல் உள்ளது. எனவே, ஓரிக்கையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.