sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காட்டுபன்றிகளால் வரப்பு நாசம் தண்ணீர் தேங்குவதில் சிக்கல்

/

காட்டுபன்றிகளால் வரப்பு நாசம் தண்ணீர் தேங்குவதில் சிக்கல்

காட்டுபன்றிகளால் வரப்பு நாசம் தண்ணீர் தேங்குவதில் சிக்கல்

காட்டுபன்றிகளால் வரப்பு நாசம் தண்ணீர் தேங்குவதில் சிக்கல்


ADDED : செப் 28, 2024 10:58 PM

Google News

ADDED : செப் 28, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய வட்டார வேளாண் விரிவாக்க மையங்களின் கட்டுப்பாட்டில், 12,000 ஏக்கர் பரப்பளவிற்கு மேல், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இதில், வாலாஜாபாத் வட்டாரம் கொட்டவாக்கம், புதுப்பாக்கம், கோவிந்தவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளன. அதேபோல, காஞ்சிபுரம் வட்டாரம் கூரம், ஒழுக்கோல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.

குறிப்பாக, வயல்வெளியில் இருக்கும் நெற்கதிர்களை நாசப்படுத்தி விட்டு செல்கிறது. இதனால், நெல் அறுவடை மகசூல் குறையும் அபாயம் உள்ளது. மேலும், வயல் வரப்புகளை சேதப்படுத்துவதால், வயலில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, காட்டுப்பன்றிகளின் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us