/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண் துறை ஆய்வக சுவரில் செடிகள் வளர்வதால் வலுவிழக்கும் நிலை
/
வேளாண் துறை ஆய்வக சுவரில் செடிகள் வளர்வதால் வலுவிழக்கும் நிலை
வேளாண் துறை ஆய்வக சுவரில் செடிகள் வளர்வதால் வலுவிழக்கும் நிலை
வேளாண் துறை ஆய்வக சுவரில் செடிகள் வளர்வதால் வலுவிழக்கும் நிலை
ADDED : ஜூன் 17, 2025 12:13 AM

பஞ்சுபேட்டை, ஜூன் 17-
காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள வேளாண் துறை ஆய்வக கட்டடத்தில் அரச செடிகள் வளர்ந்து வருவதால் வலுவிழந்து சேதமாகும் நிலை உள்ளது.-
காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில், வேளாண் துறை மண் பரிசோதனை நிலையம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து ஆய்வகம், ஒரே கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டடத்தின் சுவரில், அரச செடி, செழித்து வளர்ந்து வருகிறது.
இச்செடியின் வேர்கள் சுவரில் வேரூன்றி வளர்வதால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது.
எனவே, கட்டடத்தில் வளர்ந்து வரும் அரச செடியை வேருடன் அகற்ற வேளாண் துறை நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.