/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : ஏப் 27, 2025 01:31 AM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 2வது வார்டு, சின்னக்கடை பகுதியில், அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளி எதிரே, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது.
அப்போது, பேரூராட்சி அலுவலகம் அப்பகுதியில் இயங்கியதால், அலுவலக வளாகத்தையொட்டி அப்பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
செயற்கை நீரூற்றுடன் அமைக்கப்பட்ட இந்த பூங்கா, ஆரம்பத்தில் அழகிய செடிகள், பூங்கன்று நிறைந்து பசுமையாகவும், குளிர்ச்சியாகவும், பொது மக்களின் பொழுதுபோக்கு இடமாக இருந்தது.
பின் முறையான பராமரிப்பின்றி போனதால், நாளடைவில் செடிகள் காய்ந்தும், செயற்கை நீரூற்று போன்றவை பழுதடைந்து இருக்கைகள் தவிர மற்றவை வீணாகின.
இதனால், பூங்கா பயன்பாடின்றி தற்போது பகல் நேரங்களில் காதல் ஜோடிகள் நடமாடும் பகுதியாகவும், இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமகவும், சில நேரங்களில் கால்நடைகள் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது.
இதேபோன்று, வாலாஜாபாத் 5வது வார்டு, வல்லப்பாக்கம் பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவிலும், விளையாட்டு உபகரணப் பொருட்கள் இல்லாமல் வீணாகி வருகின்றன.
எனவே, வீணாகி வரும் இந்த பூங்காக்களை சீரமைத்து, நடைபாதை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை ஏற்படுத்தி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

