sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கலசம் மீண்டும் பொருத்துவது எப்போது? 7 ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம்

/

வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கலசம் மீண்டும் பொருத்துவது எப்போது? 7 ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம்

வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கலசம் மீண்டும் பொருத்துவது எப்போது? 7 ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம்

வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கலசம் மீண்டும் பொருத்துவது எப்போது? 7 ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம்


ADDED : டிச 05, 2024 01:51 AM

Google News

ADDED : டிச 05, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், பழமை வாய்ந்த வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஹிந்து அறநிலையத் துறை காட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கோபுரத்தில், ஐந்து கலசங்கள் இருந்தன. கடந்த 2016ல் ஏற்பட்ட வர்தா புயலின்போது, ஒரு கலசம் சேத மடைந்து, கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோபுரத்தில் கலசம் பொருத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், துறை அதிகாரிகள், ஏழு ஆண்டுகளாக கலசம் பொருத்தாமல் மெத்தனமாக இருப்பது, பக்தர்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, கோவில் கோபுரத்தில் கலசத்தை மீண்டும் பொருத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமைக்க, தமிழக அரசு சார்பில், 33 லட்சம் ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட்டு,சேதமடைந்த கோவில் கோபுர கலசம்மீண்டும் பொருத்தப்படும்.

பூவழகி,

கோவில் செயல் அலுவலர், உத்திரமேரூர்.






      Dinamalar
      Follow us