sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ராவத்தநல்லூர் ஏரி கலங்கல் சீரமைக்கும் பணி எப்போது?

/

ராவத்தநல்லூர் ஏரி கலங்கல் சீரமைக்கும் பணி எப்போது?

ராவத்தநல்லூர் ஏரி கலங்கல் சீரமைக்கும் பணி எப்போது?

ராவத்தநல்லூர் ஏரி கலங்கல் சீரமைக்கும் பணி எப்போது?


ADDED : பிப் 06, 2025 12:50 AM

Google News

ADDED : பிப் 06, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தநல்லூர் கிராமத்தில், பொதுப்பணித்துறை காட்டுப்பாட்டில் உள்ள, 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 120 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது, ஏரியின் கலங்கல் முறையாக பராமரிப்பு இல்லாமலும், மரங்கள் வளர்ந்து உள்ளன. பருவ மழை நேரங்களில் ஏரி நிரம்பும்போது, தடையின்றி கலங்கல் வழியே, உபரிநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.

கலங்கல் பகுதியில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்களால், கலங்கல் சுவர் சேதமடைந்து வருகிறது. இது குறித்து, அப்பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, கலங்கல் பகுதியில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us