sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இருளில் மூழ்கி இருக்கும் வெள்ளைகேட் மேம்பாலம்

/

இருளில் மூழ்கி இருக்கும் வெள்ளைகேட் மேம்பாலம்

இருளில் மூழ்கி இருக்கும் வெள்ளைகேட் மேம்பாலம்

இருளில் மூழ்கி இருக்கும் வெள்ளைகேட் மேம்பாலம்


ADDED : மார் 18, 2024 03:05 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலை மற்றும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சாலை விரிவாக்க பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆங்காங்கே நிறைவு பெற்று உள்ளன.

மேம்பாலத்திற்கும், சாலைக்கும் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் முடங்கியுள்ளன. இருப்பினும், சாலை ஓரம் மின் விளக்கு பொருத்தும் பணிகள் நிறைவடைந்து, கடந்த மாதம் மின் விளக்குகள் ஒளிர வைத்தனர்.

ஒரு மாதமாக மின் விளக்குகள் எரிந்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு வெள்ளைகேட் மேம்பாலத்தின் ஒரு பகுதி எரிந்து வருகிறது. மற்றொரு பகுதியில் இருக்கும் மின் விளக்குகள் எரியவில்லை.

இதனால், வாகன ஓட்டிகள் இருளில் கடந்து செல்ல வேண்டி உள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

எனவே, தடையின்றி மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us