sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலிபர் சாவில் மர்மம் மனைவி போலீசில் புகார்

/

வாலிபர் சாவில் மர்மம் மனைவி போலீசில் புகார்

வாலிபர் சாவில் மர்மம் மனைவி போலீசில் புகார்

வாலிபர் சாவில் மர்மம் மனைவி போலீசில் புகார்


ADDED : செப் 28, 2024 07:21 PM

Google News

ADDED : செப் 28, 2024 07:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஒட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 35; இவருக்கு, பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர், மாங்கல் பகுதி சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அன்று, இரவு 11:00 மணி அளவில், உத்திரமேரூர் அடுத்த, காட்டுப்பாக்கம் சாலையில், முருகன் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் முருகன் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதனிடையே, அவரது மனைவி பாக்கியலட்சுமி, கணவர் முருகனுக்கு விரோதிகள் உள்ளதாகவும், இதனால், அவர் கொலை செய்து சாலையோரம் வீசி இருக்கலாம் என, போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us