sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போலி மருத்துவரை கண்டறிய சோதனை தீவிரப்படுத்தப்படுமா?

/

போலி மருத்துவரை கண்டறிய சோதனை தீவிரப்படுத்தப்படுமா?

போலி மருத்துவரை கண்டறிய சோதனை தீவிரப்படுத்தப்படுமா?

போலி மருத்துவரை கண்டறிய சோதனை தீவிரப்படுத்தப்படுமா?


ADDED : ஜன 01, 2025 12:35 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டத் தில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. இதுமட்டுமல்லாமல், வைரஸ் காய்ச்சல் என, பலவித காய்ச்சலால், நாள்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாமல், அந்தந்த தாலுகா மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும், நுாற்றுக்கணக்கான புறநோயாளிகள் காய்ச்சல்தொடர்பாக, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், மருத்துவ மனைகளில் புறநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, கிராம பகுதிகளில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்களை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்தாண்டுகளில், காஞ்சிபுரம் நகரிலேயே பல போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கிராமங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கிராமங்களில் போலி மருத்துவர்கள் அளிக்கும் தவறான சிகிச்சையால், கிராமவாசிகள் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் ஏற்பட கூடும்.

கிராமப்புறங்களில் செயல்படும் மருத்துவர்கள், உரிய மருத்துவ படிப்பை முடித்துள்ளனரா, சான்றிதழின் உண்மைத் தன்மை போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us