sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீராங்கல் ஓடையை பராமரிக்குதா மாநகராட்சி? அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்

/

வீராங்கல் ஓடையை பராமரிக்குதா மாநகராட்சி? அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்

வீராங்கல் ஓடையை பராமரிக்குதா மாநகராட்சி? அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்

வீராங்கல் ஓடையை பராமரிக்குதா மாநகராட்சி? அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்


ADDED : டிச 05, 2024 02:12 AM

Google News

ADDED : டிச 05, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவற்றின்பராமரிப்பு குறித்து, அறிக்கை தாக்கல் செய்யு மாறு, மாநகராட்சிக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

------------------வேளச்சேரி பாலாஜி நகர் அருகே, தடுப்புச்சுவர் இல்லாத வீராங்கல் ஓடையில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில், நீரோட்டம் பாதிப்பதால், ஓடையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்தஉத்தரவு:

நீர்வளத்துறையின்கட்டுப்பாட்டில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல் ஓடை ஆகிய நீர் நிலைகள், பராமரிப்புக்காக சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு சார்பில் ஆஜரானவழக்கறிஞர் தெரிவித்தார்.

வேளச்சேரி பகுதியில் உள்ள வீராங்கல் ஓடையில் குப்பை கொட்டப்படுவதால், மழை நீர் செல்ல முடியாமல் பாதிப்புஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல்ஓடை ஆகியவற்றை, முறைப்படி சென்னை மாநகராட்சி பராமரிக்கவேண்டும்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து, சென்னை மாநகராட்சி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 7ல்நடக்கும்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us