/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த குரும்பிறை ஏரி கலங்கல் சீரமைக்கப்படுமா?
/
சேதமடைந்த குரும்பிறை ஏரி கலங்கல் சீரமைக்கப்படுமா?
ADDED : பிப் 17, 2025 01:25 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், குரும்பிறை கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 75 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.
இந்த ஏரிநீரை பயன்படுத்தி, 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பருவமழை காலங்களில் ஏரி முழுகொள்ளளவை எட்டும்போது, உபரிநீர் வெளியேர கலங்கல் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, கலங்கல் முறையாக பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால், ஏரி நிரம்பும்போது கலங்கல் உடைந்து, தண்ணீர் விவசாய நிலங்கள் மீது பெருக்கெடுத்து, பயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த கலங்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.