sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி புகார் பெட்டி உத்திரமேரூரில் தெரு நாய் தொல்லை பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா

/

காஞ்சி புகார் பெட்டி உத்திரமேரூரில் தெரு நாய் தொல்லை பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா

காஞ்சி புகார் பெட்டி உத்திரமேரூரில் தெரு நாய் தொல்லை பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா

காஞ்சி புகார் பெட்டி உத்திரமேரூரில் தெரு நாய் தொல்லை பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா


ADDED : ஏப் 22, 2025 12:24 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள கவியரசு கண்ணதாசன் தெரு, காமராஜ் தெரு, செங்குந்த பிள்ளையர் கோவில் தெரு, மிஷின் ஸ்கூல் தெரு, வெள்ளை செட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில், 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன.

கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால், இப்பகுதியில் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர், பள்ளி செல்லும் மாணவ -- மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர்.

இத்தெருக்களுக்கு புதிதாக வருவோரை தெருநாய்கள் குரைத்தபடியே விரட்டிச் செல்கின்றன. மேலும், தெருவில் உள்ள குப்பையை கிளறும் நாய்கள் உணவுக்காக ஒன்றுக் கொன்று சண்டை ஏற்பட்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, உத்திரமேரூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.கார்த்திகேயன்,

உத்திரமேரூர்.






      Dinamalar
      Follow us