sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சமூக விரோதிகள் நடமாட்டம் போலீசார் ரோந்து வருவரா?

/

சமூக விரோதிகள் நடமாட்டம் போலீசார் ரோந்து வருவரா?

சமூக விரோதிகள் நடமாட்டம் போலீசார் ரோந்து வருவரா?

சமூக விரோதிகள் நடமாட்டம் போலீசார் ரோந்து வருவரா?


ADDED : டிச 29, 2024 08:05 PM

Google News

ADDED : டிச 29, 2024 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி ஊத்துக்காடு, கட்டவாக்கம், தென்னேரி, மஞ்சமேடு, அய்மிச்சேரி, குண்ணம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களை சேர்ந்தோர், தினமும் சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில், தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இரவு, பகலாக வேலைக்கு சென்று வருகின்றனர். இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில், இரவு நேரங்களில் சென்று வரும்போது, சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆள் நடமாட்டம் இல்லாத இச்சாலை பகுதிகளில், மர்மநபர்கள் சுற்றி திரிவதால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், இரவு நேரங்களில் போக்குவரத்து ரோந்து வாகனம் அமைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us