ADDED : ஜூன் 11, 2025 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் நடந்து சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உத்திரமேரூர் தாலுகா, அருணாச்சலப்பிள்ளை சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதம், 21; அதே பகுதியில் உள்ள பர்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நவநீதம், நேற்று, காலை 9:00 மணிக்கு வழக்கம்போல வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, நவநீதம் மயங்கி விழுந்துள்ளார்.
அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.