ADDED : டிச 18, 2024 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கேசன் மனைவி துர்கா, 28. இவர், இரண்டு மாதத்திற்கு முன், குண்ணவாக்கத்திறல் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 13ம் தேதி இரவு, துர்கா வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. பின், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துர்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.