/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழு
/
மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழு
ADDED : ஜன 27, 2025 11:45 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.
இதில், பட்டா, நில ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்பு, உதவித்தொகை என, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 428 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், 2022 - -23ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருது பெற்ற, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், சமுதாய அமைப்புக்கும், 3.5 லட்சம் ரூபாய்க்கான பரிசு தொகையும், சான்றிதழ்களையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திட்ட இயக்குநர் - மகளிர் திட்டம் - பிச்சாண்டி, ஆட்சியர் - பயிற்சி - மிருணாளினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் - பொது - சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.