/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி
/
மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி
ADDED : டிச 24, 2024 10:32 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக. பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சி, கல்லுாரி சந்தைகள், கார்ப்பரேட் பஜார், அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 26 முதல் ஜன., 9ம் தேதி வரை, கே.பி.கே., ரத்தினாபாய் கல்யாண மண்டபத்தில் கண்காட்சி நடக்க உள்ளது.
இக்கண்காட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப்பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கலாம்.
மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விபரங்களை, மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

