sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்

/

 ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்

 ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்

 ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்


ADDED : நவ 26, 2025 04:12 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தெற்கு ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டு கடந்த நிலையில், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது.

இதையடுத்து, அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

டிச., 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தகால் முகூர்த்தம் கடந்த 3ம் தேதி நடந்தது.

தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், தெற்கு ராஜகோபுரத்தில் கலசம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ண தேவராயரால் 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, தெற்கு ராஜகோபுரம் 192 அடி உயரமும், 82 அடி அகலமும், 115 அடி நீளமும், 9 நிலைகள் கொண்டது. கல்காரம் கிரானோலிதிக் கற்களால் ஆனது.

இது விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி தெற்கு ராஜகோபுரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது கோபுரத்தின் உச்சியில் 11 கலசங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி டிச., 4ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்ற ன.






      Dinamalar
      Follow us