ADDED : நவ 23, 2024 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுங்குவார்சத்திரம்:ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் மேகவண்ணன்,41, ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில், பிட்டராக வேலை செய்து வந்தார். அவர், 'ஹீரோ பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், சுங்குவார்சத்திரத்தில் இருந்து, குணகரம்பாக்கம் நோக்கி சென்றார். அப்போது, குணகரம்பாக்கம் அருகே, சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
மேகவண்ணன் உடலை, சுங்குவார்சத்திரம் போலீசார் மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.