sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

யதோக்தகாரி பெருமாள் யானை வாகனத்தில் உலா

/

யதோக்தகாரி பெருமாள் யானை வாகனத்தில் உலா

யதோக்தகாரி பெருமாள் யானை வாகனத்தில் உலா

யதோக்தகாரி பெருமாள் யானை வாகனத்தில் உலா


ADDED : மார் 27, 2025 08:13 PM

Google News

ADDED : மார் 27, 2025 08:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 52வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும், இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான கடந்த 22ம் தேதி காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 24ம தேதி காலை கருடசேவை உத்சவமும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும் நடந்தது.

நான்காம் நாள் உத்சவமான கடந்த 25ம் தேதிம் காலை சேஷ வாகனத்திலும்,, இரவு சந்திர பிரபையிலும், ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை தங்க பல்லக்கிலும், இரவு யாளி வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்தார். ஆறாம் நாள் உத்சவமான நேற்று காலை சப்பரத்திலும், இரவு யானை வாகனத்திலும் யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர்.

ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை 7:40 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளும் யதோக்தகாரி பெருமாள், முக்கிய வீதி வழியாக பவனி வருகிறார். வரும் 30ம் தேதி தீர்த்தவாரியும், மார்ச் 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us