நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் நேதாஜி, 24; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று மாலை, தன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இவர் இறந்தது குறித்து, அவரது சகோதரர் பாரதி என்பவர் மாகரல் போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளார். மாகரல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், இறந்த நேதாஜியின் தலையில், பலத்த வெட்டு காயம் இருந்தது தெரியவந்தது. இவர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகித்து அவர் சகோதரர் பாரதி மற்றும் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாகரல் போலீசார், உடலை கைப்பற்றி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.