ADDED : ஜன 10, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் குயில்தோப்பு என்ற இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, காஞ்சி புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்குதகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான இருந்தஒருவரிடம் விசாரித்தனர்.
காஞ்சிபுரம் சாத்தான்குட்டை தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி, 23, என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், 15,000 ரூபாய் மதிப்பிலான, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.