/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
ADDED : அக் 27, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த, நாய்க்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முகமதுரசூல், 23; இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு வேலுார் சிறையில் உள்ள, முகமதுரசூலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு, எஸ்.பி.,சண்முகம் பரிந்துரை செய்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, முகமது ரசூல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

