/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரும்பு தளவாடம் விழுந்து வாலிபர் பலி
/
இரும்பு தளவாடம் விழுந்து வாலிபர் பலி
ADDED : அக் 30, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:  இரும்பு தளவாடம் தலையில் விழுந்து ஒடிஷா மாநில வாலிபர் பலியானார்.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் லில்லு ஜெனா, 35. இவர் உளுந்தை கிராமத்தில் தங்கி மப்பேடு பகுதியில் உள்ள இரும்பு தளவாட பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 28ம் தேதி இரவு பணியில் இருந்த போது, இரும்பு தளவாட பொருள் லில்லு ஜெனா மீது விழுந்தது. அவரை தண்டலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

