/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மரத்தில் டூ - வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு
/
மரத்தில் டூ - வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : செப் 29, 2025 12:29 AM
உத்திரமேரூர்:குண்ணவாக்கத்தில் சாலையோர மரத்தில் டூ - வீலர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
உத்திரமேரூர் தாலுகா, வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 29; இவர், நேற்று இரவு 7:30 மணிக்கு நண்பர்களான அழிசூரைச் சேர்ந்த ஜானகிராமன், 32 ; ஆண்டித்தாங்கலைச் சேர்ந்த குணசேகரன், 30, ஆகியோருடன், சாலவாக்கத்தில் இருந்து வாடாதவூருக்கு, 'பஜாஜ் பிளாடினா' டூ - வீலரில் சென்றார்.
குண்ணவாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் செல்லும்போது, டூ - வீலர் நிலைத் தடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
அதில், டூ - வீலரை ஓட்டிச் சென்ற தினேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து சென்று காயமடைந்த ஜானகிராமன், குணசேகரன் ஆகிய இருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.