sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டூ - வீலர் திருடிய வாலிபருக்கு 'காப்பு'

/

டூ - வீலர் திருடிய வாலிபருக்கு 'காப்பு'

டூ - வீலர் திருடிய வாலிபருக்கு 'காப்பு'

டூ - வீலர் திருடிய வாலிபருக்கு 'காப்பு'


ADDED : பிப் 12, 2025 10:33 PM

Google News

ADDED : பிப் 12, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன், 56. இவர், காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில், காஞ்சிபுரம் பணிமனையில் நேர காப்பாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 10ம் தேதி காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம், சிவன் கோவில் அருகே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி பணிக்கு சென்றார். வழக்கம்போல், மாலை பணி முடித்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது, இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து, சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, எலத்துார் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 30, என்பவர் திருடியது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us