sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

12 கோவில்களை வழிபடும் சிவாலய ஓட்டம் குமரியில் துவக்கம்

/

12 கோவில்களை வழிபடும் சிவாலய ஓட்டம் குமரியில் துவக்கம்

12 கோவில்களை வழிபடும் சிவாலய ஓட்டம் குமரியில் துவக்கம்

12 கோவில்களை வழிபடும் சிவாலய ஓட்டம் குமரியில் துவக்கம்


UPDATED : பிப் 26, 2025 06:20 AM

ADDED : பிப் 26, 2025 02:22 AM

Google News

UPDATED : பிப் 26, 2025 06:20 AM ADDED : பிப் 26, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 கோயில்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் மூஞ்சிறை மகாதேவர் கோயிலில் நேற்று துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் உள்ள திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருந்திக்கரை, பொன்மனை, திருபன்னியோடு, கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களை சிவராத்திரி நாளில் வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இன்று சிவராத்திரியை ஒட்டி கழுத்தில் மாலை அணிந்து காவி உடை அணிந்த பக்தர்கள் கையில் விசிறியும், இடுப்பில் திருநீற்றுப்பையும் சுமந்து கொண்டு கோபாலா கோவிந்தா என்று கோஷமிட்டபடி ஓடும் நிகழ்வு நேற்றுமதியம் மூஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கியது.

இன்று மாலை முதல் இந்த ஓட்டம் திருநட்டாலத்தில் நிறைவு பெறுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் இன்று அதிகாலை முஞ்சிறையில் இருந்து பயணத்தை தொடங்கி இரவுக்குள் முடிப்பார்கள்.

12 கோயில்களுக்கு செல்லும் பாதைகளில் கோபாலா கோவிந்தா என்ற கோஷம் எதிரொலிக்கிறது. பாதைகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், -பானகம் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us