sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

எஸ்.ஐ., மீது தாக்குதல் * 4 பேர் கைது

/

எஸ்.ஐ., மீது தாக்குதல் * 4 பேர் கைது

எஸ்.ஐ., மீது தாக்குதல் * 4 பேர் கைது

எஸ்.ஐ., மீது தாக்குதல் * 4 பேர் கைது


ADDED : ஏப் 16, 2025 02:26 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே திருமண மண்டபத்தில் ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., கிறிஸ்துராஜ் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். இதை அறிந்த வடசேரி போலீஸ் எஸ்.ஐ., கிறிஸ்துராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.

அங்கு கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது சிலர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் எஸ்.ஐ., கிறிஸ்துராஜை சிலர் கீழே தள்ளி விட்டு கல்லை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் உமா தலைமையிலான கூடுதல் போலீசார் சென்று தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

எஸ்.ஐ.,யை தாக்கியதாக தாழக்குடி அஜித் 29, வைத்தியநாதபுரம் பிரபு 28, பறக்கை ஆறுமுகமுத்துப்பாண்டி 27, வைத்தியநாதபுரம் செல்வ சூர்யா பிரதிஷ் 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய வைத்தியநாதபுரம் விக்னேஷ் 29, தெங்கம்புதூர் சந்தோஷ் 27, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us