ADDED : பிப் 04, 2024 02:39 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தமிழக , கேரள அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 38 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவிலில் இருந்து நேற்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கேரள அரசு பஸ் டிரைவர் அனீஷ் கிருஷ்ணன் 43, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். படுகாயம் அடைந்த 38 பயணிகள் குழித்துறை, நாகர்கோவில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மார்த்தாண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.