/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சென்னை பெண் பலாத்காரம் அருமனை ஆட்டோ டிரைவர் கைது
/
சென்னை பெண் பலாத்காரம் அருமனை ஆட்டோ டிரைவர் கைது
சென்னை பெண் பலாத்காரம் அருமனை ஆட்டோ டிரைவர் கைது
சென்னை பெண் பலாத்காரம் அருமனை ஆட்டோ டிரைவர் கைது
ADDED : நவ 15, 2025 01:30 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே செட்டிவிளையை சேர்ந்தவர் லிபின் ராஜ், 27; குலசேகரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சமூக வலைதளம் மூலம் இவருக்கு அறிமுகமானார்.
இருவரும் நீண்ட நேரம் மொபைல் போனில் பேசி வந்தனர். பின், வீடியோ காலில் பேசும் போது, காதலியிடம் ஆடைகளை அவிழ்க்கும்படி லிபின் ராஜ் கூறியுள்ளார். பின், அதை படம் எடுத்து வைத்துக் கொண்டு சென்னை சென்றார்.
அங்கு தான் தங்கிய அறைக்கு பெண்ணை வரவழைத்து, பலாத்காரம் செய்தார். பின், அடுத்தடுத்த முறை அந்த பெண் வர மறுத்த போது, அவர் ஆடை இல்லாமல் வீடியோ காலில் பேசிய படத்தை அவரது தாய்க்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து, லிபின் ராஜ் மீது சென்னை வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அருமனையில், லிபின் ராஜை கைது செய்து அழைத்து சென்றனர். இவர், குலசேகரம் பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

