sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

அவதுாறாக பேசிய வழக்கு; கோர்ட்டில் ஆஜரான அமைச்சர்

/

அவதுாறாக பேசிய வழக்கு; கோர்ட்டில் ஆஜரான அமைச்சர்

அவதுாறாக பேசிய வழக்கு; கோர்ட்டில் ஆஜரான அமைச்சர்

அவதுாறாக பேசிய வழக்கு; கோர்ட்டில் ஆஜரான அமைச்சர்


ADDED : ஆக 19, 2025 01:28 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்; நாகர்கோவிலில், அதிகாரியை அவதுாறாக பேசிய வழக்கில், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆஜரானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 2018ல் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலின் போது, தேர்தல் அதிகாரியாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா செயல்பட்டார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இணை பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க., -- காங்., சார்பில் முற்றுகை நடந்தது.

இதில், அப்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், ராஜேஷ் குமார், பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் தன்னை அவதுாறாக பேசியதாக, நடுக்காட்டு ராஜா, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

வழக்கு, நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர். விசாரணை செப்., 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us