sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு

/

மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு

மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு

மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு


ADDED : பிப் 12, 2025 01:35 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்துார் தொட்டி பாலத்தில் காமராஜர் படத்துடன் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைக்கப்பட்டது.

மாத்துாரில் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்ல காமராஜர் முதல்வராக இருந்தபோது தொட்டிப்பாலம் கட்டப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 115 அடி உயரத்தில் 28 துாண்கள் அமைக்கப்பட்டு அதில் ஏழரை அடி அகலத்தில் ஏழு அடி உயரத்திலான தொட்டிகளை இணைத்து கட்டப்பட்ட பாலம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுமக்கள் இதில் நடந்து சென்று பார்வையிட சிறிய பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே மிக நீளமான பாலமாக கருதப்படுகிறது.

கணியான் பாறை மற்றும் கூட்டு வாயு பாறை என இரண்டு மலைகளை இணைத்து இது அமைக்கப்பட்டது. 1963ல் பணி தொடங்கப்பட்டு 1969ல் நிறைவு செய்யப்பட்டது. வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் இதன் வழியாக செல்லும்.

பாலத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுச்சீட்டு கொடுக்கும் பகுதியில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதில் காமராஜர் படமும் அதன் கீழே பாலத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி விபரங்களும் பொறிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இந்த கல்வெட்டை உடைத்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us