sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

இறைச்சி கழிவுடன் குமரி வந்த கேரள மினி லாரி பறிமுதல்

/

இறைச்சி கழிவுடன் குமரி வந்த கேரள மினி லாரி பறிமுதல்

இறைச்சி கழிவுடன் குமரி வந்த கேரள மினி லாரி பறிமுதல்

இறைச்சி கழிவுடன் குமரி வந்த கேரள மினி லாரி பறிமுதல்


ADDED : ஜன 06, 2025 10:38 PM

Google News

ADDED : ஜன 06, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்; கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் ஒரு பன்றி பண்ணைக்கு கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் வருவதாக தகவல் கிடைத்தது. ஆறுகாணி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த மினி லாரியில் இறைச்சிக்கழிவு இருந்தது. மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் கேரளாவை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை ஏற்றி அருமனை ஊராட்சி பகுதியில் சிலர் போட்டு சென்றுள்ளனர். இது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.அந்தப் பகுதியை எஸ்.பி., ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

படப்பச்சை மற்றும் நெட்டா பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடிக்கு சென்று கேரளாவில் இருந்து வாகனங்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், ஆறுகாணியில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிக் கழிவு வாகனம் சோதனைச் சாவடியை கடந்து வந்ததா என ஆய்வு நடத்தவும் எஸ். பி. உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us