sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

/

ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : ஜன 09, 2025 10:37 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:திருநெல்வேலி -- கன்னியாகுமரி எல்லையான ஆரல்வாய்மொழி குமாரபுரம் சோதனை சாவடிகளில் பணப்பரிமாற்றம் நடந்ததை கண்டுபிடித்த எஸ்.பி., 8 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

திருநெல்வேலியில் இருந்து கனிம வளம் ஏற்றி வரும் லாரிகளை முறைப்படுத்துவதற்காக ஆரல்வாய் மொழி மற்றும் குமாரபுரத்தில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு லாரி எடை போட்ட பின்னரே அனுப்பப்படுகிறது. போலி ஆவணங்கள் மூலம் கனிம வளம் கடத்தப்படுவதும் கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவில் இந்த சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். நேராக சென்று வாகன உரிமையாளர்கள் கொடுத்த ஆவணங்களை சோதித்த போது சில ஆவணங்களுக்கிடையில் ரூபாய் நோட்டுகள் பதுக்கி இருப்பதை கண்டுபிடித்தார்.

இந்த பணம் யாரது என்று கேட்டதற்கு அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் உரிய பதில் சொல்லவில்லை. இதை தொடர்ந்து பணியில் இருந்த நான்கு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதுபோல குமாரபுரம் சோதனை சாவடிக்கு சென்ற எஸ்.பி., அங்கு பணியில் இருந்த போலீசாரை அங்கிருந்து போக செல்லிவிட்டு தன்னுடன் வந்த போலீசாரை அங்கு நிறுத்தினார். அங்கு வந்த கனிமவள லாரி டிரைவர் ஆவணங்களுடன் பணமும் கொடுத்தார். இது எதற்காக என்று கேட்டபோது, இது வழக்கமானதுதானே என்று டிரைவர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து லாரி டிரைவருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட எஸ்.பி. அங்கு பணியில் இருந்த நான்கு பேரையும் ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us