sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்

/

கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்

கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்

கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்


ADDED : ஜன 31, 2025 01:20 AM

Google News

ADDED : ஜன 31, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்

கரூர்:கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட கடைகள், மாநகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இதில், பஸ் ஸ்டாண்டின் பின்புறம் வழியாக அனைத்து பஸ்களும் வெளியில் செல்கின்றன. இதை ஒட்டியுள்ள பகுதியில், 10க்கும் மேற்பட்ட வணிக வளாகம் உள்ளது. அதற்கு இடையே மக்கள் வந்து செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பயணிகள் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வந்து செல்கின்றனர். வணிக வளாகத்தை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாயில், துார் வாரும் பணியை நேற்று முன்தினம் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது வணிக வளாக கடைகளின் முன்புற கால்வாயின் மேல் உள்ள சிலாப் கற்களை அகற்றி விட்டு கால்வாயில் துார் வாரும் பணி நடந்தது.

அப்போது, பயணியர் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் கான்கிரீட் சிமென்ட் சிலாப்பை உடைத்து விட்டு சென்றனர். இதனால், அந்த பாதையில் பயணியர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெளியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் உள்ளே செல்லும் பயணிகளுக்கு சிலாப் உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்து, மாற்று வழியில் செல்கின்றனர்.

ஆனால், பஸ் ஸ்டாண்ட் உள்ளே இருந்து வெளியில் வரும் பயணியருக்கு கான்கிரீட் சிமென்ட் சிலாப் உடைந்து இருப்பது தெரியாமல் பள்ளத்தில் தடுமாறி விழுகின்றனர். அதனால் சிலாப் கற்கள் பதித்து உடனடியாக பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us