sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்

/

பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்

பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்

பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்


ADDED : மார் 10, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்

அரவக்குறிச்சிஅரவக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

அரவக்குறிச்சியில் இருந்து பாளையம் செல்லும் வழியில், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து அரவக்குறிச்சிக்கு தினந்தோறும் மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் பலர் வந்து செல்கின்றனர். காலை, 8:00 மணிக்கு முன் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.

தனியார் பஸ், அரவக்குறிச்சியில் உள்ள புங்கம்பாடி வளைவு பகுதியிலேயே இறக்கிவிட்டு செல்கிறது. இங்கிருந்து பள்ளிக்கு செல்ல, ஒரு கிலோ மீட்டருக்கு மேல் தொலைவு உள்ளதால் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, அரவக்குறிச்சி பஸ் ஸ்டாப் வரை பஸ்கள் சென்று வந்தால், பள்ளிக்கு அருகிலேயே மாணவ, மாணவியரை இறக்கி விட்டு செல்லலாம். எனவே, பாளையத்திலிருந்து காலை, மாலை வேளையில் இயக்கப்படும் பஸ்களை, பஸ் ஸ்டாப் வரை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us